Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது - நடிகர் தனுஷ் ஓபன் டாக்

நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது - நடிகர் தனுஷ் ஓபன் டாக்
, புதன், 26 ஜூலை 2017 (17:07 IST)
தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறியது தனக்கே ஆச்சர்யமாக உள்ளது என நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
விஐபி2 பட ப்ரமோஷனுக்காக தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் பிரபல தெலுங்கு சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார். 
 
அந்த பேட்டீல் சுசீ லீக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மத்தியில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த தனுஷ், குடும்ப பிரச்சனை போன்ற மற்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்காதீர்கள் என கூறி மைக்கை தூக்கி எறிந்து பேட்டியில் பாதியேலேயே வெளியேறினார்.
 
இந்நிலையில் அந்த நிகழ்வு பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ள தனுஷ் “அப்படி நடந்து கொண்டது எனக்கே வேடிக்கையாக உள்ளது. பொதுவாக நான் அமைதியான நபர். ஆனால், அன்று அப்படி நடந்து கொண்டேன். அவர் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு பதிலளிக்க விருப்பமில்லை. விஐபி2 பட வேலை காரணமாக கடந்த 2 வாரங்களாக நான் சரியாக தூங்கவில்லை. அதனால் அப்படி நடந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
 
இப்போது அந்த வீடியோவை பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தியே: மெளனம் கலைத்த விக்னேஷ் சிவன்!!