Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து கோடி அதிகமாக சம்பளம் கேட்கும் தனுஷ்… அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (15:56 IST)
கர்ணன் படத்தின் மூலம் தயாரிப்பாளர் மிகப்பெரிய தொகையை லாபமாக எடுத்துள்ளதை அறிந்த தனுஷ் ஒரு கோரிக்கையை வைத்துள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சினிமா வியாபார வட்டாரத்தில் இந்த படத்தின் வியாபாரம் பற்றி ஆச்சர்யமான தகவல்களை பேசி வருகின்றனர். தாணு & தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தை தாணு ரிலீஸுக்கு முன்னரே 25 கோடி ரூபாய் லாபம் வரும் அளவுக்கு வியாபாரம் செய்துள்ளாராம். இது சினிமா உலகினருக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இது தெரிந்த தனுஷ் தன்னால்தானே இவ்வளவு பெரிய லாபம் அதிகமாகக் கிடைத்துள்ளது என்று நினைத்து சம்பளத்தில் 5 கோடி ரூபாய் அதிகமாகக் கேட்டு தாணுவுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments