Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு விழாவைப் புறக்கணித்த தீபிகா படுகோனே

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (17:35 IST)
‘பத்மாவதி’ படத்தால் தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், மத்திய அரசு விழாவைப் புறக்கணிக்கிறார்.
 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. இந்தப் படத்தில் ராணி பத்மினியைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, வட இந்தியாவின் சில மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இதனால், டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள், இந்தப் படத்தையே தடை செய்துள்ளன. தீபிகாவின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் தீபிகா.
 
வரும் 28ஆம் தேதி, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி துவங்கி வைக்கும் இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்தார் தீபிகா. தற்போது, தன்னால் கலந்துகொள்ள முடியாத சூழல் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments