Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும்… விஷாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (16:37 IST)
விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்றுள்ள கடனுக்காக 15 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீரமே வாகை சூடும் படத்தின் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது என லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. விஷால் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடி ரூபாய்க் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அதற்காக லைகா நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க விஷால் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது வரை நடித்துக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று விசாரித்த நிலையில் படத்துக்கு எதிராக எந்த தடையும் விதிக்க முடியாது எனக் கூறி விஷால் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் 3 வாரங்களுக்குள் 15 கோடியை டெபாசிட் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments