Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நெகட்டிவ் ; பூரண குணமடைந்த ஐஸ்வர்யா ராய், மற்றும் மகள்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (16:23 IST)
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு சற்று முன் வெளியான நிலையில் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் அமிதாப், அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை தனியார் மருத்துவமனையில் கடந்த 17 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று அனுமதிக்கப்பட்டனர்.

அமிதாப் குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நால்வருக்குமே இலேசான அறிகுறிதான் என்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இன்று அமிதாப் பச்சம் தான் குணமடைந்துவிட்டதாக தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் கொரொனாவிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் இருவரும் வீட்டிற்குச் செனதாகவும் தகவகள் வெளியாகின்றன.

ஆனால் அதே மருத்துவமனையில்தான் அமிதாப் , அபிஷேக் பச்சன் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments