Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

vinoth
வியாழன், 23 மே 2024 (10:59 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

முதலில் இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவோடு இணைந்து அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி மற்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர்கள் அவர்கள் பிரிய நமீத் மல்ஹோத்ரா யாஷொடு இணைந்து தயாரிக்கிறார்.

ஆனால் இப்போது திரைக்கதைக்கான காப்புரிமை தங்களிடம் உள்ளதாகவும் அதை தங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் காப்புரிமை மீறப்பட்டதாக அமையும் எனக் கூறி தயாரிப்பாளர் மது மண்டேனா, நமித் மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இப்போது ராமாயணம் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments