Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை மிரட்டல் விடுத்தார் கருணாகரன்: கமிஷ்னர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (19:11 IST)
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொதுநலன் கருதி பட இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர்  நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்கள். 
 
சீயோன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம் பொது நலன் கருதி. இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.
 
அந்தப் புகாரில் கருணாகரன் படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்தார். ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை.
 
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இயக்குநர் சீயோன் கருணாகரன் வராதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதற்காக இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
இயக்குநர் சீயோன் செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்த தாங்கள்ளை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியில் கருணாகரன் மிரட்டுவதாக வேதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments