கலாபவன் மணி செல்கிற, நடிக்கிற படங்களில் எல்லாம் ஏதாவது உரசல் இருந்து கொண்டேதான் இருக்கும். கலாபவன் மணியின் கலகக்குணம் அப்படி.
விமான நிலையத்தில் அவர் அதிகாரிகளுடன் போட்ட சண்டை கேரளா முழுவதும் பிரசித்தம். அவரது அடுத்த தகராறு தயாரிப்பாளர் சினேகஜித்துடன்.
சினேகஜித் தயாரிக்கும் தெய்வம் சாட்சி படத்தில் நடிக்க பத்து லட்சம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்க மறுத்தார் கலாபவன் மணி. அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்காததால், கலாபவன் மணி மலையாளத்தில் நடிக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
படத்தில் நடிக்காவிடில், கலாபவன் மணி அட்வான்ஸை திருப்பித் தந்தால் மட்டும் போதாது, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் ஈடு செய்ய வேண்டும் என்று கேட்டிருப்பதால் பிரச்சனை இன்னும் முடியாமல் நீடிக்கிறது.