ஒரே ஹோட்டல் அறையில் சித்ரா - ஹேமந்த்: தற்கொலை பின்னணி என்ன?

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (10:18 IST)
சித்ரா தற்கொலை குறித்து அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரணை. 
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்ரா, பூவிருந்தவல்லி அருகே, தனியார் ஓட்டலில் அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஹேமந்த் ரவி தங்கியுள்ளார்.
 
ஈவிபி பூங்காவில் அதிகாலை சூட்டிங் முடித்து விட்டு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா புடவையை மின் விசிறியில் மாட்டி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சித்ரா தற்கொலை குறித்து அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ரவியிடம் சென்னை நசரத்பேட்டை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 
 
ஹேமந்த் ரவி போலீஸாரிடம், சித்ரா குளிக்கச் செல்வதாகக் கூறி ரூமிற்கு வெளியே தன்னை செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டு மாற்று சாவி கொண்டு அறையை திறந்தபோது சித்ரா தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments