Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் சேரன் - ஆக.3 படப்பிடிப்பு ஆரம்பம்

பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் சேரன் - ஆக.3 படப்பிடிப்பு ஆரம்பம்
, திங்கள், 28 ஜூலை 2014 (20:00 IST)
பாரதிராஜா புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க அவர் சேரனை தேர்வு செய்துள்ளார்.
 
பழைய இயக்குனர்களில் தொடர்ந்து படம் இயக்கி வரும் ஒரேயொருவர் பாரதிராஜா. கடைசியாக அவர் இயக்கிய அன்னக்கொடி சரியாகப் போகவில்லை என்பதுடன் கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. பாரதிராஜாவின் டச் இல்லாமல் வெளிவந்த இரண்டாவது படம் அன்னக்கொடி (முதலாவது தாஜ்மஹால்).
 
அன்னக்கொடிக்கு அடுத்து அவர் இயக்குகிற படத்துக்கு 'நேற்றைக்கு மழை பெய்யும்' என்று பெயர் வைத்துள்ளார். இயக்குனர் அகத்தியன் எழுதிய கதையைதான் பாரதிராஜா இயக்குகிறார்.
 
சீனு ராமசாமி சொன்ன கதையை பாரதிராஜா இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அகத்தியன் கதையுடன் களமிறங்கியுள்ளார் பாரதிராஜா. சேரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil