Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சென்னை தான் எனக்கு வீடு” – துல்கர் சல்மான்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:20 IST)
‘சென்னை தான் எனக்கு வீடு’ என மலையாள நடிகரான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

 
 
மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 2012இல் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமான துல்கர், 2014ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘ஓகே கண்மணி’, ‘சோலோ’ என இரண்டு படங்கள் தமிழில் ரிலீஸாகிவிட்டன.
 
துல்கர் பிறந்தது கொச்சியில் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையில்தான் முடித்தார். எனவே, அவருக்கு சென்னை ரொம்பவே  ஸ்பெஷல். நிறைய நேரங்களை சென்னையில் செலவிடவே அவர் விரும்புகிறார்.
 
“சென்னை எனக்கு வீடு மாதிரி. எனக்கு சென்னையில் இன்னும் சொந்த வீடு இருக்கிறது. என் உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். மலையாளப் படங்களின் ஷூட்டிங்கிற்காக நிறைய நேரம் கேரளாவிலேயே செலவிட வேண்டியிருப்பதால்,  சென்னையை ரொம்பவே மிஸ் பண்றேன். ஷூட்டிங் இல்லையென்றால் போதும். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு  சென்னைக்கு வந்துவிடுவேன்” என்கிறார் துல்கர் சல்மான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments