Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இப்படி யாரும் செய்யக்கூடாது! தணிக்கை அதிகாரி லீலா எச்சரிக்கை

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (13:33 IST)
ஒரு திரைப்படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்துகிறோம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களின் விளம்பர யுக்திக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீபகாலமாக தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்ற படம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. தணிக்கை அதிகாரிகளே பாராட்டிவிட்டால் அந்த படம் நன்றாக இருக்கும் என்ற கருத்து உருவாகும் என்பதால் இவ்விதமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இதுகுறித்து தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி அவர்கள் எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நான் மட்டுமல்ல, தணிக்கைக் குழு அதிகாரி யாரும், திரைப்படங்களை பாராட்டுவதோ அல்லது விமர்சிப்பதோ கிடையாது. அது, முறையும் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் யாரும், 'திரைப்படம் எப்படி இருந்தது?' என்று கேட்கும்போது, சம்பிரதாயத்துக்காக மட்டுமே, 'படம் நன்றாக உள்ளது' என்று சொல்வதை, தணிக்கை அதிகாரிகள் பாராட்டியுள்ளதாக, தயாரிப்பாளர்கள் சிலர் அதை விளம்பரப்படுத்துகின்றனர். இது தவறானது. இனி, இது போல் யாரும் செய்ய வேண்டாம் என்று, தயாரிப்பாளர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments