Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்சா படத்தின் நான்காவது பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர் சி வி குமார்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:43 IST)
2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பீட்சா 2 என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சி வி குமார். ஆனால் முதல் பாகத்துக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பீட்சா என்ற வெற்றிப்படத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை.

சமீபத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பீட்சா 3 : தி மம்மி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கினார். அஷ்வின் கக்குமானு, காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்போது பீட்ஸா திரைப்படத்தின் நான்காவது பாகத்தை தயாரிக்க உள்ளதாக சி வி குமார் அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூஸ் இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments