வேல ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை நாவலில் வரும் ஒரு பகுதியை ஆர்யா, அதர்வா, ராணா மற்றும் அரவிந்த்சாமியை வைத்து இயக்குவதாக இருந்த பாலா அதனை தற்காலிகமாக கைவிட்டுள்ளார். அதற்கு முன் சிறிய படமொன்றை இயக்குவதாக திட்டம்.
இந்தப் படம் பிராமண குடும்பங்களின் கலாச்சார பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தனது முதல் படம் சேதுவில் பிராமண குடும்பத்தை விலாவரியாக காட்சிப்படுத்தியிருந்தார் பாலா.
காலங்காலமாக தமிழ் சினிமா காட்சிப்படுத்துவது போன்று பிராமணர்கள் சாதுவாக, உலகில் நடக்கும் எந்த கெட்ட விஷயங்களையும் அறியாத அப்பாவிகளாக அதில் காட்டப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக பாலாவின் படம் இருக்கலாம் என்கிறார்கள்.