Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்கும் அஜித் படத்தயாரிப்பாளர்

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (21:54 IST)
சிவகார்த்திகேயன் தற்போது ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அவர் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் இயக்கி வந்த படம் பாதியில் நிற்கின்றது. அதேபோல் லைகா தயாரிக்கவிருந்த சிவகார்த்திகேயன் - விக்னேஷ்சிவன் படமும் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது.
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றிவிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது இந்த படத்தையும் தயாரிக்க போனிகபூர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
போனிகபூர் தற்போது ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களை தயாரிக்கும் போனி கபூர், அடுத்து தமிழில் அதிக படங்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், தனது இரண்டு மகள்களையும் தமிழில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?.. கோவை சரளா சொன்ன காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments