Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்க சிவந்த வானம் படத்தால் வந்த வினை - மணிரத்னத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (09:56 IST)
செக்க சிவந்த வானம் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கும்படி கூறி மர்ம நபர்கள் சிலர் படத்தின் இயக்குனர் மணிரத்னத்திற்கு போனில் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
செக்க சிவந்த வானம் படம் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதிராவ் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
நீண்ட வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் தனது பழைய பாணியில் செம் ஹிட் படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 
இந்நிலையில் மணிரத்னத்தின் ஆபிஸுக்கு போன் செய்த மர்ம நபர்கள், செக்க சிவந்த வானம் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கும்படியும், மீறினால் எங்களது வெடிகுண்டுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார், போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments