Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: சிக்கிய வாலிபர் - தீவிர விசாரணை!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (13:52 IST)
நடிகர் விஜய் தனது குடும்பத்தினருடன் சென்னனை அருகே உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் அது சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும்  கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.  

 
இதையடுத்து விஜய் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரைண மேற்கொண்டனர். இதையடுத்து இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக விசாரணை நடத்தியதில் சென்னை போரூர் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் என்பது கண்டறியப்பட்டது. 
 
அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில்,  அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறாராம். அண்மையில் தான் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் ரிலீசாகியது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments