Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (12:05 IST)
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குச் நா கஹோ, குரு மற்றும் சர்க்கார் ராஜ் ஆகிய படங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஐஸ்வர்யா, அபிஷேக் இருவரையும் வைத்து படம் தயாரிக்க நினைத்தார்.


 
 
அனுராக் கஷ்யப் தயாரிக்கும் பாலிவுட் படம் குலாப் ஜாமூன். அந்த படத்தில் ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அபிஷேக் பச்சனனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. குலாப்  ஜாமூன் படக் கதையை கேட்ட ஐஸ்வர்யா தனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். கதையை மாற்றினால் நடிக்கிறேன். அதுவும் பிடித்திருந்தால் நடிக்கின்றேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.
 
ஐஸ்வர்யா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் கணவரின் படமாக இருந்தாலும்  கூட நடிக்க முடியாது என்று தில்லாக கூறியுள்ளார். ஏ தில் ஹை முஷ்கில் படத்திற்கு பிறகு அனில் கபூரின் ஃபேனி கான்  படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் ‘லெஜண்ட்’ ஒளிப்பதிவாளர்!

‘அஜித்தின் அடுத்தப் படம் ஆதிக்குடன்தான்’… உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்!

‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments