Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது- நடிகர் யாஷ்

Sinoj
புதன், 10 ஜனவரி 2024 (12:42 IST)
நடிகர் யாஷ் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பபட்ட  நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் மின்சாரம் ஷாக் அடித்து பலியான நிலையில், ''நற்பணி செய்யுங்கள்…அதுவே போதும். தாய் தந்தையை  மதியுங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் ‘’என்று யாஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் யாஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முயன்றனர். மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

எனவே   நடிகர் யாஷ், அவர்களின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது பேசிய  யாஷ்,  ‘’எங்களை பற்றி யோசிக்காதீர்கள், ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள். பைக்கில் என்னை பின் தொடராதீர்கள் ‘’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளின்போது இத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பதை கண்டால் பிறந்தநாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது. அசம்பாவிதங்கள் நேர்ந்தால் குடும்பத்தினரின் கதி என்ன? யார் வேண்டுமானாலும் பண உதவி செய்வர். ஆனால், இறந்த மகன் மீண்டும் வருவாரா?  நற்பணி செய்யுங்கள்…அதுவே போதும். தாய் தந்தையை  மதியுங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் ‘’என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments