Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிய ஜூலி

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (10:42 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் சர்ச்சை பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  போட்டியாளர்களின் செயல்களால் நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான வெறுப்பு ரசிகர்களுடையே அதிகரித்து கொண்டே  வருகிறது.

 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, தமிழ் சரியாக  தெரியாத நமீதா கூட ஓரளவு தன்னால் முடிந்தவரை சரியாக பாடினார். போட்டியாளர்களில் ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்து  பாடுவதற்கு முன் ஒரு சிற்றுரையாற்றினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட கற்றுக்கொடுத்த பள்ளிக்கு நன்றி கூறியதோடில்லாமல், மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தயுமானவர் எழுதியதாக  கூறினார்.
 
இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது கூட யார் என்று தெரியாத இவரையா வீரத்தமிழச்சி என்று அழைத்தோம் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments