Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜுலியை சீண்டிய பிரபலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜுலியை சீண்டிய பிரபலங்கள்
, புதன், 28 ஜூன் 2017 (11:29 IST)
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வருகிறது. சுமார் 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

 
அந்த பிரபலங்களில் ஒருவராக தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரிதும் பேசப்பட்ட ஜுலி என்ற பெண்ணும் கலந்து கொண்டார். தற்போது அவரின் பேச்சு தான் சமூகவலைத்தளங்கள் முழுவதிலும் பேசப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் போது பிரபல நடிகையும், பா.ஜ.கவின் உறுப்பினருமான காயத்ரி ரகுராம்  மொட்டையாக ஏன் அங்க கத்தின என்று கேட்டார். பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏன், அரசுக்கு எதிராக கோஷமிட்டாய், நீ பெரிய அரசியல்வாதியா என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜூலி எங்கள் வீட்டில் 10 ஜோடி மாடு இருந்தது. ஆனால் தற்போது ஒரு ஜோடி மாடுதான் உள்ளது. அதனால் மாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவே நான் போராட்டத்திற்கு சென்றேன் என கூறினார். மேலும் கூறிகையில் நம்ம உரிமை நாம கேட்டுதான் வாங்கணும், என்று பதில் கூறி கொண்டிருந்தபோது மற்றொரு, நடிகை ஆர்த்தி  குறுக்கிட்டு, அரசை எதிர்த்து கோஷம் போடக்கூடாது என்றும், இயல்பான கோரிக்கைதான் வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவாதம் அப்படியே சில நிமிடங்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தேவை இல்லாத மற்றவர் மனம் கஷ்டப்படும்படியான கேள்விகளை கேட்டதும், நீ ஒண்ணும் பெரிய ஆள் இல்ல என்பது போன்று நடந்து கொள்ளவதும்  நல்லாவா இருக்கு?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு லவ் புரபோஸ் செய்; நடிகர் ஆரார்விடம் சொன்ன நடிகை ஓவியா