Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாகிட்ட விஜய்யை ஹீரோவாக்க சொன்னேன்… விழா மேடையில் பேசிய எஸ் ஏ சி!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (08:10 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

ஆனாலும் எங்கு சென்றாலும் அவரால் விஜய்யைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ பட இசை வெளியீட்டு விழாவி பேசிய அவர் “நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர சென்றேன். ஆனால் அவர் நாம் நண்பர்களாகவே இருப்போம் எனக் கூறிவிட்டார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து விஜய்யை ஹீரோவாக்க சொல்லி கேட்டு சென்றேன். அப்போதும் மறுத்துவிட்டார். இப்படி என் வாழ்க்கையில் நான் கேட்ட இரண்டுமே எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

மீண்டும் தொடங்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ’எல் ஐ சி’ பட ஷூட்டிங்!

மோகன் லால் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எம்பூரான் பட போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments