Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் பணிகளை தொடங்கிவிட்டேன் - கமல்

மீண்டும் பணிகளை தொடங்கிவிட்டேன் - கமல்
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (13:51 IST)
மீண்டும் பணிகளை தொடங்கிவிட்டேன். வேலைக்காக ஓடத் தயாராகிவிட்டேன். மனம் உயரே பறக்கிறது என்று கமல் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.


 
 
சபாஷ் நாயுடு படத்தின் சென்னை ஷெட்யூல்டை தொடங்கவிருந்த நிலையில் கமல் மாடிப்படியில் தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். அறுவை சிகிச்சைக்குப்பின் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், மீண்டும் சபாஷ் நாயுடு பணிகளை தொடங்கியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் பணிகளை தொடங்கிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
கமலுடன் பிரம்மானந்தம், ஸ்ருதி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் சபாஷ் நாயுடுவில் நடிக்கின்றனர். இளையராஜா இசை.
 
அடுத்த மாதம் சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கத்தில் ஒரு குண்டூசிக்கும் கணக்கு உள்ளது - விஷால் பேட்டி