Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபு பங்காரத்தின் மூலம் தடையை கடந்த நயன்தாரா

பாபு பங்காரத்தின் மூலம் தடையை கடந்த நயன்தாரா

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (13:21 IST)
தெலுங்கு திரையுலகம் போட்ட தடையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார் நயன்தாரா.

 
 
 
அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக தெலுங்கு திரையுலகம் நயன்தாராவுக்கு தடை விதித்தது. நயன்தாரா மன்னிப்பு கேட்பார் என்று தெலுங்கு திரையுலகம் எதிர்பார்த்தது. 
 
ஆனால், நீங்களும் உங்க தெலுங்குப் படமும் என்று சென்னையில் செட்டிலானவர், தொடர்ச்சியாக தமிழில் நடித்து, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டார். 
 
ஒவ்வொரு படத்துக்கும் நாயகி தேர்வு செய்யும் போதும், நயன்தாராவின் பெயரை முதலில் எழுதி அடித்துவிட்டே அடுத்த நடிகைக்கு போனது தெலுங்கு திரையுலகம். நயன்தாரா இல்லாத வெற்றிடத்தை அவர்கள் சீக்கிரமே அறிந்து கொண்டனர். நடுவில் சிலர் நயன்தாராவை தெலுங்கில் நடிக்க அணுகிய போது, விருப்பமில்லை என்று விருப்பத்தோடு மறுத்தார். கடைசியில், நெருங்கிய நண்பர் வெங்கடேஷுக்காக அவருடன் பாபு பங்காரம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் முடிந்து டீசரும் வெளியிட்டுள்ளனர்.
 
பாபு பங்காரத்துக்குப் பிறகு, தன்னை புறக்கணித்த தெலுங்கு திரையலகுக்கு நயன்தாரா கருணை காட்டுவரா இல்லை மீண்டும் பேக்கப்பாகி சென்னையில் செட்டிலாவாரா என்பது நயன்தாராவின் விசால மனதின் முடிவில் இருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments