Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமானவரிச் சோதனை

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமானவரிச் சோதனை
, திங்கள், 14 நவம்பர் 2016 (13:14 IST)
பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாகுபலி படம் வெளியானது.

 
 
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
 
இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
 
இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டனவா என்பதை அதிகாரிகள் கூறவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிட்டார் - மன்சூரலிகான் காட்டம்