Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படத்தயாரிப்பில் இறங்கும் ஏவி எம் நிறுவனம்! இன்ப அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:32 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றான ஏவிஎம் புரோடக்‌ஷனின் நிறுவனர் மெய்யப்பனின் நினைவு நாளான இன்று அந்நிறுவனம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளைக் கடந்த சினிமா தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. அவர்களது சக போட்டி நிறுவனங்களான ஜெமினி, விஜயா, வாஹினி போன்ற நிறுவனங்கள் எப்போதோ இழுத்து மூடப்பட்ட பிறகும் இன்றும் ஏவிஎம் இயங்கி வருகிறது. ஆனால் படங்களை தயாரிக்காமல் அரங்கு வாடகை, ரெக்கார்டிங் ஸ்டுடியோ போன்ற பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கப் போவதாக ஏவிஎம் சரவணன் அறிவித்துள்ளார். கடைசியாக சிவாஜி உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments