Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘மெர்சல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷனைத் தொடங்கிய அட்லீ

‘மெர்சல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷனைத் தொடங்கிய அட்லீ
, சனி, 15 ஜூலை 2017 (17:48 IST)
ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், ‘மெர்சல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கி விட்டார் அட்லீ.
 


 

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தில், வடிவேலு, சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என 4 காமெடியன்கள் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த வருட தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில், அசத்தலான ஒரு விஷயத்தைச் செய்து வருகிறாராம் அட்லீ. அதாவது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் இப்போதே ஆரம்பித்து விட்டாராம். அதன் முதல்கட்டமாக, படப்பிடிப்பு முடிந்த நடிகர்களை டப்பிங் பேச சொல்லிவிட்டாராம். ஷூட்டிங் ஒரு பக்கம் நடக்க, டப்பிங் பணிகள் இன்னொரு பக்கம் நடந்து வருகிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரதமர் மோடிக்கு கடிதம்