Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவில் படமாகும் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:59 IST)
ஜெயம் ரவி நடித்துவரும் ‘அடங்க மறு’ படத்தின் காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளிப்  படமான இது, வருகிற 26ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்துக்கு  ‘அடங்க மறு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹோம் மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஷி கண்ணா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார்.
 
‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆண்டனி ரூபன் எடிட் செய்கிறார். இது, ஜெயம் ரவியின் 24வது படம். இந்தப் படத்தின் ஷூட்டிங், தற்போது அண்ணா நகரில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தக் காட்சிகள், இரவில் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் மொழிப் பேதம் பார்ப்பதில்லை… அது மட்டும் அமைந்தால் ஓடோடி வந்துவிடுவேன் – ராஷ்மிகா மந்தனா!

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments