Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மரணம்

Webdunia
புதன், 22 அக்டோபர் 2014 (17:14 IST)
தமிழ் சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.
 
தமிழின் மிக முக்கிய திரைப்படங்களான நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி உள்பட ஏராளமான படங்களுக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாள சினிமாவும் இவரது திறமையை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டது.
 
சில்க் ஸ்மிதாவை வைத்து இவர் இயக்கிய, அன்று பெய்த மழையில் படம் அதன் ஒளிப்பதிவுக்காக இன்றும் பேசப்படுவது முக்கியமானது.
 
கடந்த ஜுன் மாதம் அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அசோக்குமாரின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேழிப்பாகும்.

பிரேம்ஜிக்கு திருமணம்.? சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை வைரல்.!

’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

என் லட்சுமிய காணும்.. கண்டுபிடிச்சு கொடுங்க.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ டிரைலர்..!

அய்யய்யோ.. அந்த ஹீரோயினா? சூர்யா 44 படத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

Show comments