Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மரணம்

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மரணம்
, புதன், 22 அக்டோபர் 2014 (17:14 IST)
தமிழ் சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.
 
தமிழின் மிக முக்கிய திரைப்படங்களான நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி உள்பட ஏராளமான படங்களுக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாள சினிமாவும் இவரது திறமையை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டது.
 
சில்க் ஸ்மிதாவை வைத்து இவர் இயக்கிய, அன்று பெய்த மழையில் படம் அதன் ஒளிப்பதிவுக்காக இன்றும் பேசப்படுவது முக்கியமானது.
 
கடந்த ஜுன் மாதம் அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அசோக்குமாரின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேழிப்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil