Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனம் ஈர்த்த அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:47 IST)
அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள நித்தம் ஒரு வானம் என்ற படத்தின் போஸ்டரை இணையத்தில் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு நித்தம் ஒரு வானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. போதை ஏறி புத்தி மாறி படத்தை தயாரித்திருந்த ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments