Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடம்பாக்கத்தின் பேயாட்சி - ஆர்யாவும் இப்போது அங்கத்தினர்

கோடம்பாக்கத்தின் பேயாட்சி - ஆர்யாவும் இப்போது அங்கத்தினர்
, புதன், 27 மே 2015 (12:17 IST)
முன்பு கடவுள்கள் பற்றிய புராண, சமகால படங்கள் வெளியாகும். டிசம்பர் மாத ஐயப்ப சீஸனில் இரண்டு ஐயப்பப் படங்களாவது வெளியாகும். ஆடி மாதமானால் அம்மன் மகிமையைச் சொல்லும் படங்கள். இப்போது இந்தவகை கடவுள் படங்கள் அருகிவிட்டன. சரியாகச் சொன்னால் இல்லவே இல்லை. அந்த இடத்தை பேய்கள் கைப்பற்றியுள்ளன.
கடவுள் படங்களை எடுத்துக் குவித்த ராம.நாராயணனின் மகன்தான் இப்போது பேய் படங்களின் புரவலர். அவர் வாங்கி வெளியிட்ட அரண்மனை, பிசாசு, காஞ்சனா, இப்போது டிமான்டி காலனி என எல்லா பேய்களும் வலை அள்ளுகின்றன. இந்த பேய் சாம்ராஜ்யம் ஆர்யாவையும் விடவில்லை.
 
அமர காவியம் ஜீவா சங்கரின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படமும் பேய் படமாம். தயாரிப்பது யாராக இருந்தாலும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்தான் படத்தை வெளியிடும். கோடம்பாக்கத்தில் பேய்களின் ஒரே நம்பிக்கைக்குரிய ஏஜென்ட் அவர்கள்தான்.

Share this Story:

Follow Webdunia tamil