Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா:காரணம் என்ன?

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:09 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் ஆர்யா இன்று காலை சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல பிரச்சனைகளை கடந்து இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து தனது வாக்கை அளித்தார்.

பொதுவாக ஆர்யா தினமும் காலை சைக்கிளிங் செல்வது வழக்கமாம். ஆதலால் இன்று காலை வழக்கம்போல் சைக்கிளிங் சென்று அப்படியே நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளாராம்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க கட்டடம் கட்ட கடுமையாக உழைத்தனர் என்றும், பிரச்சனைகளை இரு அணிகளும் பேசி தீர்த்து இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments