Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, சத்யராஜ் – இந்திப்படம் தள்ளிவைப்பு !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (12:23 IST)
ரஞ்சித் இயக்கும் புதியப் படத்தில் ஆர்யா மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் நடிக்க இருக்கின்றனர்.

பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா என அவர் இயக்கியப் படங்களின் பேசுபொருளின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறினார். வரிசையாக ரஜினியை வைத்து இரண்டு படங்களை இயக்கியதால் இந்திய அளவில் புகழடைந்த ரஞ்சித் அடுத்ததாக ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப்படம் தள்ளிப்போவதால் அதற்குள் ஒரு தமிழ்ப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். பாக்ஸிங்கைக் கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தில் நடிக்க ஆர்யா மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னொரு நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தை இயக்கி முடித்தபின் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு சம்மந்தமான இந்திப்படத்தை இயக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments