Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண்விஜய்!

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (17:35 IST)
நடிகர் அருண்விஜய் போலீஸ் வேடத்தில் நடித்த 'குற்றம் 23' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு போலீஸ் படத்தில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் கண்ணன் உதவியாளர் கோபிநாத் நாராயணமூர்த்தி என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிஜ நிகழ்ச்சி குறித்த கதை என்றும் இந்த படத்தில் அருண்விஜய்யுடன் சில பிரபலங்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படத்தில் டூயட் பாடல், ரொமான்ஸ் காட்சிகளுக்கு இடமில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அருண்விஜய்யின் 'தடம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments