Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

vinoth
வெள்ளி, 28 மார்ச் 2025 (11:19 IST)
தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார்.

மிஷ்கினின் அந்த பேச்சை நடிகர் அருள்தாஸ் கண்டித்து இன்னொரு மேடையில் பேசினார். அதில் “எவ்வளவோ உலக இலக்கியங்கள் மற்றும் உலக சினிமா பார்ப்பதாக மிஷ்கின் சொல்கிறார். ஆனால் ஒரு மேடை நாகரிகம் தெரியாதா? சில வார்த்தைகளை நாம் மேடையில் பேசக் கூடாது. வேறு எங்கு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? உலக சினிமாவைப் பார்த்து காப்பியடிக்கும் போலி அறிவாளிதான் மிஷ்கின்” எனக் கண்டித்தார். அதன்பிறகு மிஷ்கின் தன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் அருள்தாஸ் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “எனக்கு மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை. நானும் அவரும் இணைந்து ஜித்தன் படத்தில் பணியாற்றியுள்ளோம். இப்போது நாம் ஒரு வார்த்தைப் பேசினால் கூட அது உலகமெல்லாம் போய் சேர்கிறது. அப்படி இருக்கும் போது சினிமாக்காரர்களான நாம் பொறுப்புடன் பேசவேண்டும் என்பதால்தான் அப்படி பேசினேன். ஆனால் மிஷ்கின் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்குத் தலை வணங்குகிறேன்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments