Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு ?

சசிகலாவுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு ?
, சனி, 6 பிப்ரவரி 2021 (19:37 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார். தற்போது, அவர் பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும்  நிலையில்  சசிகலா வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
 
இதற்காக அமமுக கட்சி தலைவர் டிடிவி உட்பட சசிகலாவின் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சசிகலா வருகையை எண்ணி பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது என டிடிவி கூறியுள்ளார்.
 
மேலும் எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள் விடுத்துள்ள டி.டி.வி தினகரன் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதியும் பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், சசிகலா வருகையின் போது அவருக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ அவரது ஆதரவாளர்கள் காவல்துறையில் அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் 25-வது நாள்...ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்....வைரலாகும் புகைப்படங்கள்..