Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா புகழும் இறைவனுக்கே! பிரச்சினைக்கும் கூடவா? – ஏ.ஆர்.ரகுமான் பதில்

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (09:19 IST)
நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என கூறியுள்ளார்.

ஆஸ்கர் வென்ற முதல் தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 53வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் ’தி ஃபியூச்சர்’ என்னும் புதிய இசை முயற்சியை தொடங்கி வைத்தார்.

தமிழக கிராமங்களில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். மேலும் போர், போராட்டம் போன்றவை நடந்து கொண்டிருக்கும் சூழலில் கலைஞர்கள் அழகான படைப்புகளை தர வேண்டும் என கூறியுள்ளார். நாட்டில் சமீப காலமாக நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று கூறி சென்றுள்ளார்.

ஆஸ்கர் விழாவில் சொன்ன அதே வார்த்தையை சொன்னது பகடியாகவா அல்லது பதில் சொல்லாமல் நழுவி கொள்வதற்காகவா என்று சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments