Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீசார்: என்ன காரணம்.?

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:10 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி புனேவில் நடந்து வந்த நிலையில் திடீரென போலீசார் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இரவு 10 மணி வரை மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
பத்து மணிக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடத் தொடங்கிய போது காவல்துறை அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்ததாகவும் ஆனால் அதை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை அடுத்து மேடைக்கு ஏறிய போலீசார் நிறுத்தும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments