Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி இரண்டாம் பாகத்தில் தொடரும் மற்றொரு கேள்வி?

Webdunia
வியாழன், 4 மே 2017 (10:28 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸான  படம்  ‘பாகுபலி-2’. ராஜமௌலியின் பாகுபலி பட பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. பாகுபலி 2  ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 415 கோடியும்,  வெளிநாடுகளில் ரூ. 125 கோடியும் வசூலித்துள்ளது.

 
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் பாகுபலி 2. பாகுபலி முதல் பாகம் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பாகுபலி இரண்டாம் பாகம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.  இந்த நிலையில் இப்படத்தின் வில்லன் ராணா (பல்வாள் தேவனின்) மனைவி யார்? என்று சமூகவலைதளங்களில் கேள்வி  எழுப்பியுள்ளனர்.
 
பாகுபலி முதல் பாகத்தில் பல்வாள் தேவனின் மகனாக ஒருவர் நடித்திருப்பார். பாகுபலி இரண்டாம் பாகத்தில் பல்வாள் தேவனின் மனைவி குறித்த எந்த காட்சியும் இடம் பெறவில்லை. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி  எழுப்பியுள்ளனர்.
 
பாகுபலி இரண்டாம் பாகத்தில் கட்டாப்பா பாகுபலியை கொன்றது ஏன்? என்பதற்கான விடை கிடைத்து விட்டது. ஆனால்  பல்வாள் தேவனின்(ராணா) மனைவி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மறுபடியும் ஒரு கேள்வி உருவாகியுள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments