Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாருப்பா அது அஞ்சலி மனசை கஷ்டப்படுத்துறது...?

யாருப்பா அது அஞ்சலி மனசை கஷ்டப்படுத்துறது...?
, செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (19:28 IST)
பேட்டி என்று போனாலே, ஒரேயடியாக புலம்பித் தள்ளுகிறார் அஞ்சலி. மாப்ள சிங்கம், இறைவி, தரமணி என்று வாழ்க்கை ஜோ‌ராக போகும் போது ஸ்பீடு பிரேக்காக ஏன் இந்த பற்கடிப்பு?
 

 
அஞ்சலி வெளிநாட்டு காதலரை ரகசிய திருமணம் செய்துவிட்டார், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று தொடர்ந்து எழுதுகிறார்களாம். ஐயா எனக்கு காதலும் இல்லை காதலனும் இல்லை திருமணமும் நடக்கலை குழந்தையும் பொறக்கலை என்று பேட்டிக்கு பேட்டி பல்லவி பாடுகிறார் அஞ்சலி. இருந்தும் சில இரும்பு மனம் கொண்டவர்கள் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளுகிறார்கள். 
 
இப்படி எழுதுவதால் மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இப்போதைக்கு என்னுடைய முழுக்கவனமும் சினிமாவில்தான் இருக்கு. இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அஞ்சலி.
 
அஞ்சலி மனசுதான் கஷ்டப்படுதுல்ல... விடுங்கப்பா கிசுகிசு எழுதறதை.

Share this Story:

Follow Webdunia tamil