Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ்- அனிருத் பிரிவின் காரணம்: இதுக்கா இவ்வளவு பில்டப்!!

தனுஷ்- அனிருத் பிரிவின் காரணம்: இதுக்கா இவ்வளவு பில்டப்!!
, திங்கள், 9 ஜனவரி 2017 (12:00 IST)
சொந்தக்காரப் பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தவர் நடிகர் தனுஷ். ஆனால் சில காலங்களால் தனுஷ் அனிருத்தை தவிர்த்து வருகிறார். 


 
 
சில பல காரணங்களால் தனது படங்களில் அனிருத்தை ஒப்பந்தம் செய்வது இல்லை. தனுஷின் புதிய ஆஸ்தான இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் ஷான் ரோல்டன்.
 
தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் பின் தொடர்வதை கூட நிறுத்தினார். இந்த பிரச்சனை குறித்து தனுஷும், அனிருத்தும் எதுவும் பேசாமல் இருந்தனர்.
 
இந்நிலையில் அனிருத் பிரிவுக்கான காரணம் பற்றி பேசியுள்ளார். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாதபோது என்னை நம்பிய ஒரே ஆள் தனுஷ் என அனிருத் கூறியுள்ளார்.
 
ஒரு படைப்பாளி அடுத்தடுத்த படங்களில் ஒரே நபரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணியாற்றினால் பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிடும். 
 
எனவே, தான் நானும், தனுஷும் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் மீண்டும் ஒன்றாக பணியாற்றுவோம் என அனிருத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவா, கீர்த்தி சுரேஷா...? சாவித்ரி யார் என்பதற்கு விடை கிடைத்தது