அக்கட தேசத்தில் அனிருத் இசைக்கு அதிகரிக்கும் டிமாண்ட்… சிரஞ்சீவி படத்தில் ஒப்பந்தம்!

vinoth
சனி, 1 பிப்ரவரி 2025 (09:24 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர், லூசிபர் ரீமேக், ஆச்சார்யா என அனைத்துப் படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் இப்போது சிரஞ்சீவி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அனில் ரவிபுடி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகிய இரண்டு இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்து சிரஞ்சீவியை இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் நானி தயாரிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபகாலமாக தமிழ் மொழி தாண்டியும் அனிருத் பிற மொழிப் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளார். தெலுங்கில் ஜெர்ஸி மற்றும் தேவரா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments