Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்த ஆனந்தராஜ் – இதுதான் காரணம்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (11:18 IST)
நடிகர் ஆனந்தராஜ் தான் ஏன் ஒரு மணிரத்னம் படத்தில் கூட நடிக்க முடியவில்லை என்பது குறித்து டூரிங் டாக்கீஸ் இணையதள சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உருவாக்கிய மிகச் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். 90 களில் வில்லனாக அச்சமூட்டியவர் 2000களுக்குப் பிறகு ரூட்டை மாற்றிக்கொண்டு இப்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களின் படங்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் எல்லாம் இவர் நடித்துள்ளார். ஆனால் இயக்குனர் மணிரத்னம் படத்தில் மட்டும் நடித்ததே இல்லை.

இது குறித்து அவர் சமீபத்தில் டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் ’பகல் கனவு படத்தில் முரளியோடு சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் முரளி கருப்பு நான் வெள்ளை என்பதால் கேமரா மென் வேண்டாம் என சொல்லிவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒருமுறை போலிசாக நடித்துவிட்டால் அதற்கு பின்னர் வேறு நல்ல பாத்திரங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் நான் மறுத்துவிட்டேன். அதன் பின் அவர் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments