Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்

முதல்முறையாக பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்
, புதன், 21 ஜனவரி 2015 (11:46 IST)
அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பிதியின் மகள் ஆரத்யாவுக்கு 3 வயது ஆகிறது. இதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு ஆரத்யாவை அழைத்து வந்ததில்லை.


 
இந்நிலையில் முதல்முறையாக அமிதாப்பச்சன் தனது பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்தார்.
 
அமிதாப்பச்சனின் மும்பை வீட்டுக்கு தினம் ஏராளமான ரசிகர்கள் வருவதுண்டு. வீட்டில் ஓய்வாக இருந்தால் வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பார் அமிதாப்பச்சன். 

webdunia
முதல்முறையாக அவர், பேத்தி ஆரத்யாவுடன் வீட்டிற்கு வெளியே வந்து கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். பேத்தியுடன் வந்த அமிதாப்பச்சனைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கையசைத்தனர்.
 
அமிதாப்பச்சன் இதுகுறித்து பேசும்போது, ஆரத்யாவுடன் ரசிகர்களை சந்தித்தபோது எல்லோரும் வாழ்த்தினர். அது பெரிய பரிசாக அமைந்தது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil