Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் ஜாமின் கோரி அமலா பால் மனு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (11:19 IST)
சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகை அமலா பால் மனுதாக்கல் செய்துள்ளார்.
பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்துகொண்டார். பின் கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அமலா பால் புதுச்சேரியில் வாகனப்பதிவு செய்து ரூ. 20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் அமலா பால் சார்பில் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தான் புதுச்சேரியில் வசிக்கவில்லை என்று கூறுவது தவறென்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஏதுவாக புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அவ்வப்போது அங்கு சென்று தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமலா பாலின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments