Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் என்ன நயன்தாரா காலை பிடிச்சேனா? சீறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

நான் என்ன நயன்தாரா காலை பிடிச்சேனா? சீறிய லட்சுமி ராமகிருஷ்ணன்
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (11:10 IST)
நான் என்ன பப்ளிசிட்டி பண்ணுவதற்காக நயன்தாரா காலை பிடிச்சு, என் படம் டிரைலரை ரிலீஸ் பண்ணுங்கமா என்றும், அவங்களோட சேர்ந்து புகைப்படம் எடுத்தும் வெளியிட்டேனா? என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
நடிகையும், இயக்குனரும், டி.வி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து கூறியதாவது:-
 
நான் என்ன கட்ட பஞ்சாயத்து நடத்துறேனா? என் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொருவரையும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களாவே நினைக்கிறேன். என்னால் முடிஞ்ச உதவிகளை செய்து வருகிறேன்.
 
பப்ளிசிட்டிக்காக நான் எதுவும் செய்வதில்லை. எனக்கு சமூகம் மீது அக்கறை உள்ளது. சுமுகமான முறையில் பிரச்சனையை தீர்த்து வைத்து உதவி செய்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் சாலையோரத்தில் ஒரு பாட்டி, தன்னம்பிக்கையுடன் இருப்பதை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன்.
 
உடனே, பப்ளிசிட்டிக்காக செய்யறீங்களான்னு கேட்டால், என்ன சொல்வது?
 
நான் என் படத்துக்காக நயன்தாரா காலை பிடிச்சு, என் படத்தின் டிரைலரை ரிலீஸ் பண்ணுங்கமா என்றும் அவங்களோட சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தாள், அது பப்ளிசிட்டி என்று கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரட்சி எப்படி உருவாகிறது...? பா.ரஞ்சித் விளக்கம்