Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி... அல்போன்ஸ் புத்ரன் பதிவு!

vinoth
வியாழன், 18 ஜனவரி 2024 (14:34 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் சில சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது தான் சமூகவலைதளங்களில் இனிமேல் எதையும் பதிவிடப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் “முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் இனிமேல் நான் எதையும் பதிவிடப் போவதில்லை.  என் பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால் எங்கள் உறவினர்கள் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருந்தால் அது அனைவருக்கும் நிம்மதியைத் தரும் என நினைக்கிறேன். அப்படியே நடக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் பேசினேன்.. அவர் சக்தியை செலவழிக்க விரும்பவில்லை: வைரமுத்து

எளிமையாக நடந்து முடிந்த விஜய்யின் அடுத்த பட பூஜை!

மஹாராஜா படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாரான படக்குழு!

கோட் படத்தின் காட்சிகள் யுடியூபில் வெளியாகுமா?.. ஏஜிஎஸ் போட்ட ப்ளான்!

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments