Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்

Webdunia
திங்கள், 14 மே 2018 (18:51 IST)
தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ், சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
 
சூர்யாவை வைத்து ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், ‘சூர்யா 37’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.
 
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இந்நிலையில், தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கெனவே ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘கெளரவம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments