Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘புஷ்பா’ சிங்கிள் பாடல்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:19 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் புஷ்பாவின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பென்னி தயால், தெலுங்கில் சிவம், மலையாளத்தில் ராகுல் நம்பியார், கன்னடத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் ஹிந்தியில் விஷால் தத்லானி ஆகிய ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்
 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தன நடித்துள்ள இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார் என்றும் அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments